அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து புதுச்சேரி முதல்வரின் தனிச்செயலர் பலி
புதுச்சேரி, டிச.15- அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்து சிகிச்சையிலிருந்த புதுச்சேரி முதல்வரின் உதவி தனிச்செயலர் உயிரிழந்தார். புதுவை மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ் அரிமா (வயது 34). இவர் முதல்வர் ரங்கசாமியின் உதவி தனிச் செயலராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் சொந்த வேலையாக இரு சக்கர வாகனத்தில் காலாப்பட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து சின்னகாலாப்பட்டு இசிஆர் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த வர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிறன்று (டிச.15) உயிரிழந்தார். அவரது உடல் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பவழக்காரன் சாவடி சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு 7 பயிற்சிகள் விரைவில் தொடக்கம்
சென்னை, டிச.15-
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட புக் பைண்டிங் பயிற்சி உட்பட மேலும் புதிதாக 7 பயிற்சி
கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக உயர் நீதி
மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் ஆண்டு தோறும் 21 பேருக்கு புக் பைண்டிங் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ‘நூல கங்கள் கணினிமயம் ஆகிவிட்டதால் புக் பைண்டிங் பயிற்சி முடிக்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை’ என்று கூறி அந்த படிப்பை தமிழக அரசு திடீரென நிறுத்திவிட்டது.
ஆனால், புக் பைண்டிங் பயிற்சியை முடிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால், நடப்பு கல்வி ஆண்டில் புக் பைண்டிங் பயிற்சியை மீண்டும் தொடங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டி ருந்தது. தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்
குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயக்குநர் லட்சுமி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘புக் பைண்டிங் பயிற்சியை வரும் கல்வி ஆண்டு முதல் நிறுத்துவதாக அறிவித்து பிறப்பிக்கப்பட்ட அர சாணை திரும்ப பெறப்பட்டுவிட்டது. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக புக் பைண்டிங் பயிற்சியுடன் மேலும் 7 புதிய பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
புளியந்தோப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
சென்னை, டிச.15 சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடந்து சென்றவரி டம் வழிப்பறி செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு திரு.வி.க. நகர் 9ஆவது தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரகு (19). இவர் கடந்த 13ஆம் தேதி இரவு தனது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டு புது பாலம் வழியே நடந்து சென்று கொண்டிருந் தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ரகுவை வழி மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி 1,600 ரூபாய், கைக்கடிகாரம் ஆகிய வற்றை பறித்து சென்று ள்ளார். இதுகுறித்து ரகு அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் வழிப் பறியில் ஈடுபட்டது நர சிம்மா நகரைச் சேர்ந்த சின்ன அப்பு (எ) பிரதீப் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1000 ரூபாய், கைக்கடி காரம், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்
கடலூர்,டிச.15- கடல் சீற்றம் காரணமாக கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மாயமானதால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் சித்திரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன், ஜெகன், சேகர் ஆகிய மூன்று மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்பொழுது அவர்கள் சென்ற படகு கடல் சீற்றம் காரணமாக தூக்கி வீசப்பட்டது. இதில் ஜானகிராமன் மற்றும் சேகர் ஆகியோர் அதே படகை பிடித்து தப்பிய நிலையில் ஜெகன் படகில் இருந்து கீழே தவறி கடலில் விழுந்தார். ஜெகனை தேடிப்பார்த்த ஜானகிராமனும், சேகரும் கரைக்கு திரும்பி வந்து கிராம மக்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜெகனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில கடலோர காவல் படையினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து ஜெகனை தேடி வருகின்றனர். மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி மாயமான சம்பவம் சித்திரை பேட்டை கிராம மக்களுடைய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தை இயற்கை சீற்றம் பாதித்த மாவட்டமாக அறிவித்திடுக சிபிஎம் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
கடலூர், டிச.15- இயற்கை சிற்றங்களால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தை பாதுகாக்க, நிரந்தர தீர்வு ஏற்படுத்த இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவித்து, பெஞ்சல் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கிட வேண்டும். பெண்ணாடத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட பொது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: கடலூர் மாவட்டம் தொடர்ந்து தொடர் மழை, வெள்ளம், புயல், சுனாமி, கடும் வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கக் கூடிய மாவட்டமாக உள்ளது. இயற்கை பேரிடர் பாதிப்பு மாவட்ட மாக அறிவிப்பு செய்து ஒன்றிய, மாநில அரசுகள் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கிடவும் வேண்டும். 7 மாவட்டங்களின் வடி கால் பகுதியாக கடலூர் மாவட்டம் உள்ளது. மழைக்காலங்களில் வரும் தண்ணீர் கெடிலம், வெள்ளாறு தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் மூலம் 50 டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று கலந்து விடுகிறது. மாவட்ட முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், வாய்க்கால்களை முறை யாக தூர்வார் வேண்டும். வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வெலிங்டன் ஏரி, கொண்டங்கி ஏரிகளை முழுமையாக தூர்வாரிட அரசு உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும். கெடிலம், தென்பெண்ணையாறு, கொள்ளிடம், வெள்ளாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளின் குறுக்கே 5 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தடுப்ப ணைகளை கட்டி தண்ணீரை தேக்கி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஏற்பாடு செய்திட வேண்டும். மலட்டாறு மற்றும் பரவனாற்றின் கறைகளை மேலும் பலப்படுத்திட வேண்டும். வெள்ள காலங்களில் வரும் தண்ணீர் மற்றும் என்எல்சியிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை விரை வில் வெளியேற்ற மார்க்சிஸ்ட் கட்சி யின் நீண்ட கால கோரிக்கையின் பேரில் சமீபத்தில் அரசால் துவக்கப் பட்டுள்ள அருவாமூக்குத் திட்டத்தை விரைந்து முடித்து பருவ கால பேரிடரை அரசு தடுக்க வேண்டும். புயல், வெள்ள காலங்களில் மாவட்டத்தில் உள்ள சாலைகள், பாலங்கள், குடிசை வீடுகள், விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைகின்றன. வெள்ளத்தை தடுப்பதற்கு நிரந்தர தீர்வாக தென்பெண்ணையாற்று கரையை பலப்படுத்த வேண்டும். கடலூர் நத்தப்பட்டு முதல் தாழங்குடா வரை தென்பெண்ணை ஆற்றின் கரைகளை கான்கீரிட் சுவர் (Concrete wall) அமைத்து கடலூர் மக்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி பணிகளை உடனே துவக்கிட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். சேதமடைந்த குடிசைகளுக்கு 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பாசன பயிர் இழப்பிற்கு ஏக்கருக்கு 30 ஆயிரம், கால்நடைகளுக்கான நிவார ணம் உயர்த்தி வழங்க வேண்டும், தண்ணீர் புகுந்த வீடுகளுக்கு வட்டி இல்லாத கடனாக ஒரு லட்சம் வழங்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.