ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு, மத்திய பல்கலைக் கழக நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்த்து செவ்வாயன்று (ஏப்.19) தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வடசென்னை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், அம்பத்தூரில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரியில் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், திருநின்றவூரில் மாநிலக்குழு உறுப்பினர் பா.சுந்தரராசன் ஆகியோர் பேசினர்.