districts

img

ஒன்றிய பட்ஜெட்டை எதிர்த்து காஞ்சிபுரத்தில் மறியல்

காஞ்சிபுரம், ஆக.2 ஏழை-நடுத்தர மக்களுக்கு எதிரான மோடி அரசின் நாசகர பட்ஜெட்டை கண்டித்து (ஆக.1) வியாழனன்று காஞ்சி புரம், குருவிமலை, படப்பை ஆகிய மூன்று மையங்களில்   மறியல் போராட்டம் நடைபெற்றது.  இதில் நூற்றுக்கணக் கானோர் கலந்து கொண்டு கைதாயினர். படப்பை அஞ்சல் அலுவலகம் முன்பு  நடைபெற்ற மறியலில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயி னார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், குருவிமலை கூட்டுச் சாலையில்  நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.நேரு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பழனி ஜி.வசந்தா, வி.சிவப்பிரகாசம், காஞ்சிபுரம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மதுசூதனன், மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்.