இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மற்றும் பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்பு வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டச் செயலாளர் லெனின், மாவட்ட நிர்வாகி சௌமியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.