கடலூர், டிச.28- இயற்கை சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் 23வது கடலூர் மாவட்ட மாநாடு வடலூரில் நடைபெற்று வருகிறது. இம் மாநாட்டில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தீர்மானத்தை மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாதவன், கருபையன் ஆகியோர் முன்மொழிந்து பேசினார். கடலூர் மாவட்டம் தொடர்ந்து மழை, வெள்ளம், புயல், சுனாமி வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. ஏழு மாவட்டங்களின் வடிகாலாக கடலூர் மாவட்டம் உள்ளது. மற்ற மாவட்டங்களில் பெய்யும் மழையும் கடலூர் மாவட்டம் வழியாக செல்வதால் கடும் பாதிப்பை சந்திக்கிறது. எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், ஆறுகள், குளங்கள் தூர் வார வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். மேலும் நிரந்தர தீர்வு ஏற்படுத்த ஒன்றிய அரசு, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விவசாய விளைபொரு ளுக்கு கட்டுபடியான விலை, கருப்பு பண பாக்கி, தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கு வது. மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வேலை வாய்ப்பை உருவாக்கி, வேலையில்லாமல் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.