districts

img

விழுப்புரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: 516 பேருக்கு பணிநியமான ஆணை

விழுப்புரம்,டிச.25- விழுப்புரம் சட்ட கல்லூரி வளாகத்தில்  நடைபெற்ற தனியார்துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் 516 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.  கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் 100 சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதில் விழுப்புரம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 முகாம்களில் ஏற்கெனவே 2 முகாம்கள் நடத்தப்பட்டு விட்டன. 3-ஆவது வேலைவாய்ப்பு முகாம் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடத்தப்பட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் சி.பழனி தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஆட்சியர் பேசுகையில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மட்டுமன்றி மாதந்தோறும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம், 1,115 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார். முகாமில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 117 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று நோ்காணலை நடத்தின. முகாமில் மொத்தம் 2,159 இளைஞா்கள் பங்கேற்ற நிலையில் அவா்களில் பணிக்கு 516 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியால் பழனி வழங்கினார். 58 போ் இரண்டாம் கட்டத் தோ்வுக்கு அழைக்கப்பட்டனா். முகாமில் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சேலம் மண்டல துணை இயக்குநா் எஸ்.மணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநா் பாலமுருகன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் வேல்முருகன், அரசு சட்டக் கல்லூரி முதல்வா் கிருஷ்ணலீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.