துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் சனிக்கிழமை (அக்.19) நடைபெற்ற அரசு விழாவில் திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்த 860 ஊராட்சி மன்றங்களுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 412 ஊராட்சி மன்றங்களுக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தைச்சேர்ந்த 208 ஊராட்சி மன்றங்களுக்கும் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மக்களவை உறுப்பினர்கள் அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.