பகிர்வு கலை இலக்கிய அமைப்பு சார்பில் “உழைக்கும் பெண்கள் வணக்கம்” என்ற தலைப்பில் சமூக மாற்றத்திற்காக களத்தில் பணி புரிபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு சமூக செயல்பாட்டாளராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கவிஞர் தமிழ் மணவாளன் உடனிருந்தார்.