districts

img

வடகிழக்கு பருவமழை எதிரொலி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கள்ளக்குறிச்சி அக் 15 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நட வடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலை பிரசாந்த் முன்னி லையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி அக்.15 அன்று பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவிக்கையில், சின்னசேலம் வட்டம், கச்சராய பாளையம் ஏரி மழையால் நிரம்பி உள்ளதை பார்வையிட்டு மழை நீர் வெளியேறும் வரத்து வாய்க்கால்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள பாது காப்பு நடவடிக்கைகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்யப்பட்டு ஏரியில் மழை நீரின் அளவுகளை தொடர்ந்து கண்காணிப்பதுடன் ஏரி கரைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது என்றார். தொட ர்ந்து வடக்கனந்தல் பேரூராட்சி கோமுகி அணை நீர்வரத்து வாய்க்கால்களை பார்வை யிட்டு மழை நீர் வரத்து வாய்க்காலில் சீராக வெளியேற மேற்கொள்ளப்பட்டு வரும் பணி கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வரத்து  வாய்க்காலில் உள்ள தேவையற்ற செடி, கொடி களை அப்புறப்படுத்தி மழைநீர் சீராக செல்ல தேவையான நட வடிக்கைகள் மேற்கொள்ள அறி வுறுத்தப்பட்டது. தொடர்ந்து கோமுகி அணை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு மழை நீர் இருப்பு, நீர் வெளியேறும் அளவு, மலைப்பொழிவு, கடந்த காலங்களில் அணைகளில் சேமிக்கப்பட்ட நீரின் அளவு,நீர் திறப்பு,அணை  பாது காப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் அதிக மழையால் அணை முழு கொள்ளளவை எட்டும் பொழுதும் தேவையான பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் அனைத்து மழைநீர் வரக்கூடிய அனைத்து கிளை ஆறுகளையும் தொடர்ந்து பார்வையிட்டு மழை நீர் அளவுகளை விழிப்புடன் கண்காணிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து கல்வராயன் மலை வட்டம், மாவடிப்பட்டு கிராமத்தில் வன உரிமைச் சான்று கோரி பொது மக்கள் வழங்கிய கோரிக்கை மனு வினை நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் வன உரிமைச் சான்று வழங்கும் பணிகளை விரைவாக முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் கொடுந்துறை, நொச்சிமேடு சிறுப்பாலம் ரூ.2.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதை யும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பொதுமக்க ளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அரசின் அனைத்து துறைகளின் சார்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை  எதிர்கொள்ளும் வகை யில் அரசு அலுவலர்கள் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என மாவட்ட மதுசூதன் ரெட்டி தெரி வித்தார். இந்த ஆய்வின்போது தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.