தாம்பரம் தொகுதி செம்பாக்கம் புது நகரில் பொங்கல் விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று (ஜன 21) நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. வாலிபர் சங்க புதுநகர் கிளைச் செயலாளர் அனந்த பிரியன் தலைமையில் நடந்த விழாவில் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் தா.கிருஷ்ணா, மாதர் சங்க நிர்வாகிகள் சரஸ்வதி, முத்துலட்சுமி, கிருத்திகா, சிஐடியு தலைவர்கள் ஜெயவேலு, குழந்தைசாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.