districts

img

தென்பெண்ணை ஆற்றில் காணும் பொங்கல்

விழுப்புரம்,ஜன.17- நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை 2 நாட்கள் முடிந்ததும் காணும் பொங்களன்று குடும்பம், உறவினர்களுடன் சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று  வருவது வழக்கம்.  இந்த ஆண்டும் காணும் பொங்கலன்று விழுப்புரம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் பிடாகம் என்ற இடத்தில் விழுப்புரம், பிடாகம், ஏனாதிமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்ந்தனர். பிறகு ஆற்றின் கரையோரம் ஆங்காங்கே பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.  மேலும் ஆற்று தண்ணீரில் குளித்தும், ஆடி, பாடியும் கொண்டாடினர். விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலிந்தும் திரளான மக்கள் வந்திருந்தனர்.