districts

img

மூலக்கொத்தளம் திட்டப்பகுதி குடியிருப்புகள்

சென்னை, டிச. 2- மூலக்கொத்தளம் திட்ட பகுதி குடியிருப்புகளை ராமதாஸ் நகர், பிரிவில் தோட்டம், பால் டிப்போ ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கட்டண மின்றி வழங்கக் கோரி அனைத்துக் கட்சி கூட்ட மைப்பு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ராம தாஸ் நகர், பிரிவில் தோட்டம், பால் டிப்போ ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்ப ங்கள் எந்த அடிப்படை வசதி யும் இன்றி கடந்த 55 ஆண்டுகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகிறோம். மேலும் வறுமை கோட்டின் கீழ் உள்ள தாழ்த்தப் பட்ட மக்களே அதிகம் வசிக்கின்றனர். எங்கள் நீண்டநாள் கோரிக்கையான கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடி யிருப்புகளை எந்த வித கட்டணமும்இன்றி முன்னுரிமை அடிப்படை யில் ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கி றோம் என அதில் கூறப் பட்டுள்ளது. இதில் ஜி.ஜெகன், ரமேஷ் (திமுக), ஆர்.பாஸ்கர், எம்.சேகர், ஜி.பாஸ்கர் (அதிமுக), டி.வெங்கட், ஏ.முருகேசன் (சிபிஎம்), டி.தேவா (சிஐ டியு), பாண்டி (வாலிபர் சங்கம்), கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.