47ஆவது சென்னை புத்தகக்காட்சியில் ‘புக்டே’ இணையதள இதழின் கவிஞர்கள் எழுத்தாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். மேலும், கலைவிமர்சகர் இந்திரன் உள்ளிட்டு படைப்பாளிகளுக்கு நூல்களை பரிசளித்தார். இந்நிகழ்வில் பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாசிரியர் க.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.