கிருஷ்ணகிரி, ஜூன் 9-
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போக்சோ சட்டத்தை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு கூடுதல் கண்காணிப்பாளர் சங்கு தலைமை தாங்கினார்.
போக்சோ சட்டத்தை பயன்படுத்தும் போது உரிய சட்ட விதி களை காவல் துறையினர் பின்பற்ற வேண்டும்.
பாதிக்கப்படும் சிறுமி களை முதலில் மனதளவில் மீட்க வேண்டும். அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். புகார்கள் மீது விசாரணை நடத்தி குற்ற வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.