districts

img

திருவண்ணாமலையில் 9 மையங்களில் மறியல் போர்

திருவண்ணாமலை, செப். 7- திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 மையங்க ளில் ஒன்றிய அரசு அலுவ லகங்கள் முன்பு நடை பெற்ற மறியலில் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வந்தவாசியில் வட்டார செயலாளர் அப்துல் காதர்  தலைமையில் நடந்த மறியலில் மாநிலக் குழு உறுப்பினர் இரா. சிந்தன், திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே நடைபெற்ற மறியலில் மாநிலக் குழு உறுப்பினர் எ.வி.சிங்காரவேலு ஆகி யோர் கலந்து கொண்டனர். கலசபாக்கத்தில் வட்டார செயலாளர் பி.சுந்தர்  தலைமையில் மாவட்டச் செயலாளர் எம். சிவக் குமார், போளூர் வட்டார செயலாளர்  ரவிதாசன் தலை மையில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம். வீர பத்திரன், கண்ணமங் கலத்தில் வட்டார செயலா ளர் சி. ரமேஷ் பாபு தலை மையில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.அப்பாசாமி,  செங்கத்தில் வட்டச் செயலாளர் ஏ.லட்சுமணன் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர் சி.எம்.பிரகாஷ்,  தண்டராம்பட்டில் வட்டச் செயலாளர் ஆர். அண்ணாமலை தலைமை யில் மாவட்டக் குழு உறுப்பி னர் ச.குமரன் ஆகியோர் பங்கேற்றனர். பெரணமல்லூரில் வட்டச் செயலாளர் என். சேகரன் தலைமையிலும், செய்யாரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் தலைமையில் மறியல் போராட்டம் நடை பெற்றது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற  மறியல் போராட்டத்தில் இடைக் குழு மற்றும் கிளை நிர்வாகி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.