districts

img

மறியல் விளக்க பிரச்சாரம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  செப்.7 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்தை விளக்கி செவ்வாயன்று (செப்.5) வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே பகுதி செயலாளர் ஜி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் பேசினார். ஆ. பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.  

சென்னை அண்ணா நகர் பகுதி, பள்ளி அரசன் தெருவில் கோ.சத்யன் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் பி.சுகந்தி, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் பேசினர். 

திருமுல்லைவாயிலில் ராபர்ட் ராஜ் தலைமையில் செவ்வாயன்று (செப்.4) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன்,தொகுதி செயலாளர் அ.ஜான், ஆகியோர் பேசினர்.

ஆயிரம் விளக்கு பகுதி, தர்மாபுரத்தில் கிளைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் வே.இரவீந்திர பாரதி உள்ளிட்டோர் பேசினர்.