கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ரூ.215 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய சிறப்பு மற்றும் உயர் சிறப்பு சிகிச்சைக்கான புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. ஞாயிறன்று அமைச்சர் பிகே.சேகர்பாபு நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மேயர் ஆர்.பிரியா ராஜன், மருத்துவக் கல்வி இயக்கக சிறப்பு அலுவலர் டாக்டர் எம்.ரமேஷ், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கே.ஹேமலதா உள்பட பலர் உடனிருந்தனர்.