திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பல மொழிகள், பல மதங்கள், பல பழக்க வழக்கங்களைக் கொண்டு வேற்று மையில் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்து வாழ்ந்து வருகின்ற னர். ஆனால் பத்தாண்டுகளாக ஒற்று மையில் வேற்றுமையை விதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பன்மைத்துவம் பூத்துக் குலுங்கும் மண்ணில் ஒற்றைத்துவத்தை மொழி, உணவு, வாழ்முறை, நிலப்பரப்பில் ஆட்சி எல்லை என எல்லாவற்றிலும் திணிக்கப் பார்க்கின்றனர் அராஜக வாதிகள். சமூகத்தில் எல்லா மனிதர்களும் சமத்துவத்தோடு வாழ்வதற்கு சோச லிசமே தீர்வு. எனவேதான் மதம், மொழி, உணவு என இம்மண்ணின் பன்மைத்து வத்தைக் குலைக்கும் எழுத்துக்களை, பேச்சுக்களை, காட்சி ஊடக படைப்பு களை நமது இயக்கம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இதனைப் பண்பாட்டுத் தளத்தில் முன்னெடுக்கிற எல்லா ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டி ருக்கிறது சிபிஎம். மலக்குழி மரணங்கள், ஆணவக்கொலைகள், தீண்டாமைக் கொடுமைகள், நிறுவனப் படுகொலைகள், மாட்டி றைச்சிக் கொலைகள், சிறுபான்மை யினர் மீதான தாக்குதல் முதலான அநீதி கள் தலையெடுக்கும் போதெல்லாம் கட்சி வலுவாக தலையிடுகிறது. பண்பாட்டுத் தளத்தில் பன்மைத்துவத்தை உயர்த்திப் பிடித்து மக்கள் ஒற்று மையை பாதுகாக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கொடி இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 ஆவது மாவட்ட மாநாடு.