ராணிப்பேட்டை, ஆக. 25 - ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் சுமார் 40 ஆண்டுகளாக 25 குடும்பங்களைச் சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் காமராஜர் சிலை அருகில் வசித்து வருகின்றனர். ஊசி, பாசி மணி விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களுக்கென்று சொந்தமாக இடமோ, வீடோ இல்லாத நிலை உள்ளது. இதனால் வக்கிர எண்ணம் கொண்ட சில மனிதர்களாலும், வெயில், மழை, காற்று போன்ற இயற்கை சீற்றங்களாலும் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனிதகுலம் தோன்றி வேட்டைச்சமூகத்தின் மிச்சமாக கருதப்படும் எங்கள் பூர்வக்குடி மக்களுக்கு இளைப்பாறுவதற்கு ஒரு வீடில்லை என்று நரிக்குறவர் மக்களின் தலைவர் கடம்பன் தனது குமுறலை இப்படி துவங்கினார். ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் ஒதுக்குப்புறத்தில் உள்ள எங்கள் வசிப்பிடத்தில் மாலை நேரங்களில் சில மது பிரி யர்கள் போதையில் எங்கள் வசிப்பிடத்தின் மீது கல்லெறி கின்றனர். நியாயம் கேட்டால் இரவு நேரங்களில் வீண்வம்பு கிழுக்கின்றனர். மழைக் நேரங்களில் படுத்து உறங்க இடமில்லாததால் கட்டிட தாழ்வாரங்களில் ஒதுங்கி உறங்கும் போது சில கடைக்காரர்கள் எங்கள் மீது தண்ணீர் ஊற்றி எழுப்பி துரத்துகின்றனர். சில வாகன ஓட்டிகள் எங்கள் மீது வாக னங்களை கொண்டு மோதுவது போல் பயமுறுத்துகின்றனர். எங்கள் பெண்களிடம் சில ரவுடிகள் பாலியல் தொந்தரவு செய்கின்றனர். நரிகுறவர் இனமக்கள் குடிக்கவும், குளிக்கவும், தண்ணீர் இல்லை, உடை மாற்ற மறைவான இடமில்லை. பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை என கண் கலங்கினார். மாணவர்களின் கல்வி குறித்தான அரசு திட்டங்கள் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாதது அரசு நிர்வாகத்தின் விழிப்புணர்வு இயக்கத்தின் பலவீனத்தை காட்டியது. நரிக்குறவர்கள் சுயமரியாதை யுடன் வாழ அரசு நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கொடுத்துள்ளோம். மனுவை பார்த்த அதிகாரிகள் உடனே
10 - 15 கி.மீ தொலைவில் இடம் தருவதாக சொல்கின்றனர். ஆனால் அவ்வாறு சொல்லுகிற மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மாறி கொண்டே தான் இருக்கிறார்களே தவிர வீடு கிடைத்தப்பாடில்லை, கொடுத்த மனுகள் எங்கே போனது.. ? சரியோ தவறோ,,, கடைசியாக எங்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு அனைத்தும் மாவட்ட ஆட்சி யரிடம் ஒப்படைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளளாமோ என்கிற அளவுக்கு மனசோர்வுக்கு ஆளாகிவிட்டோம் என்று வேதனையோடு கூறினார். நரிக்குறவர்கள் குடியிருப்பதற்கு லாடபுரம், அத்தித்தாங்கல் ஆகிய இரண்டு இடங்களை காண்பித்து பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். தற்போது பேருந்து வசதி உள்ள சக்கர மல்லூர் கிராமத்தில் உள்ள இடத்தை தேர்ந்தெடுத்துள்ளோம் விரைவில் அவர்களுக்கு இடம் தர ஏற்பாடு செய்யப்படும் என விஏஓ தெரிவித்துள்ளதாக கூறினார். பொருளாதாரம், அறி வியல் தொழில்நுட்பம், நாகரிகம், கல்வி வளர்ச்சியடைந்துள்ள இந்த காலகட்டத்தில் ஒரு பூர்வக்குடி மக்க ளுக்கு வீடில்லை என்பது அதிகார வர்க்கத்தின் கையாலாகாத்தனம் என்ற விமர்சனம் வரவாய்ப்புள்ளது. ஆகவே நரிக்குறவர் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுத்து அவர்களை பாது காப்பாகவும், சுகாதாரத்துடனும் வாழ அரசு அதிகாரிகள் வழிசெய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. - எச்.கார்த்திக்