districts

img

பட்டா இல்லாமல் பரிதவிக்கும் நாகனூர் மக்கள்

கிருஷ்ணகிரி, ஆக. 18-

      கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டம், பெரிய கூட்ட குளம் ஊராட்சி மன்றத்திற்கு பட்டது நாகனூர் கிராமம். இங்கு 80 குடும்பம் உள்ளது. அங்குள்ள நிலத்தில் 15 பேரை தவிர மற்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல தலை முறைகளாக அனு பவத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பட்டா கேட்டு வரு கிறார்கள். ஆனால், கிராம கணக்குகளில் ‘அனா தினம்’ என்று பதிவாகி யுள்ளது. மேலும், சுடுகாட்டிற்கு இடமில்லை.  

    அனுபவ விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டும், சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்ககோரி பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால், ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கிளைச் செயலாளர் குப்பன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன், வட்டச்செய லாளர் கே.மகாலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. கோவிந்த சாமி ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசி னர். மாவட்டக்குழு உறுப்பினர் அண்ணா மலை, நாகராஜ் பாஞ்சால ராசன், கிருஷ்ணன், தர்மன் கோபால், லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.