districts

img

மாற்றுக் குடியிருப்பு எங்கே? அதிகாரியுடன் மக்கள் வாக்குவாதம்

சென்னை, ஜூன் 2 -

     மாற்றுக் குடியிருப்பு குறித்த தகவல்களை தெரி விக்காமல், கணக்கெடுப்பு நடத்த மக்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

    சுவாமி சிவானந்தா சாலை முதல் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை வரை யிலான சுமார் 2.5 கி.மீ. நீளத்திற்கு பக்கிங்காம் கால்வாயை அரசு மேம்படுத்த உள்ளது. இதற்காக கரையோர குடியிருப்புகளை அகற்ற உள்ளது.

   இந்த பணியின் போது பாதிக்கப்படும் மக்க ளுக்கு மாற்று குடியிருப்பு வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய விரி வான திட்ட அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வரு கிறது.

   இதற்கு மாறாக குடியிருப்புகளை அகற்ற கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கி யுள்ளனர். இதற்கு மக்கள் ஒத்துழைக்க மறுத்து திருப்பி அனுப்பி வரு கின்றனர். இந்நிலையில் வியாழனன்று (ஜூன் 1) லாக் நகர் பகுதியில் அதிகாரி கள் பயோ மெட்ரிக் கணக் கெடுப்புக்கு வந்தனர்.

    அப்போது, மாற்று வீடு கள் எங்கே ஒதுக்கப்படும் என்பதை உறுதி செய்த பிறகே பயோமெட்ரிக் கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து அதிகாரி கள் மீண்டும் திரும்பி சென்றனர்.

  இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரன் ஆகி யோர் உடனிருந்தனர்.