சென்னை, ஜூலை 9 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதி, 31வது வார்டு (ராதா நகர்) கிளை உறுப்பினர் தோழர் பி.ஆர்.சிவலிங்கம் சனிக்கிழமையன்று (ஜூலை 8) காலமானார். அவ ருக்கு வயது 95.
அஸ்தினாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உட லுக்கு கட்சியின் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி. பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, வியா பாரிகள் சங்கத் தலைவர் பி.ஜீவா, தாம்பரம் மாநக ராட்சி 28வது வார்டு கவுன்சிலர் ஜி.விஜய லட்சுமி, ராதா நகர் கிளைச் செயலாளர் மாயவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து அன்னாரது உடல் ஜமீன் ராயப்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.