சண்டிகர், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் மின்சார நிறுவனங்களை தனியாருக்கு விற்க முயலும் பாஜக அரசு கண்டித்து திருவண்ணாமலையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் காங்கேயன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.பாரி, சிவராஜ், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.