கவிதை உறவு,விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய நூறு கவிஞர்களுக்கு “கலைஞர் விருது”வழங்கும் விழா சென்னையில் வி.ஜி. சந்தோஷம் முன்னிலையில் நடைபெற்றது. கதை,கவிதை,கட்டுரை,ஊக்க பயிற்சி உள்ளிட்ட நூல்கள் எழுதியுள்ள, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மற்றும் ஓசூர் புத்தகத் திருவிழா குழுவின் நிர்வாகியும் கவிஞருமான மணிமேகலைக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் “கலைஞர் விருது”வழங்கினார்.