districts

img

வெண்மணி தியாகிகளின் 55வது நினைவு தினத்தையொட்டி

வெண்மணி தியாகிகளின் 55வது நினைவு தினத்தையொட்டி புதனன்று (டிச.27) சிந்தாதரிப்பேட்டையில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு சிபிஎம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி, 62 மற்றும் 63வது வட்ட கிளைகள் சார்பில் நடைபெற்றது. இதில், கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.வேணுகோபாலன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆர்.கபாலி, என்.வீரபெருமாள், என்.நந்தகுமார், எஸ்.டி.ராஜேந்திரன், உஷாராணி, கிளைச் செயலாளர்கள் டி.அன்பழகன், எஸ்.குணா, என்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர்.