சென்னை, ஆக. 5-
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
தேவையான இடங்களில் மேம்பாலங் கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் (ஓ.எம்.ஆர். சாலை) 4 மேம்பாலங்கள் கட்டுவதற்கு மாநில அரசு ரூ.331 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான முதல் தவணையாக ரூ.50 கோடியை வழங்கியுள்ளது.
தரமணி - எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பு, எம்.ஜி.ஆர். சாலை - பெருங்குடி, துரைப் பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு, சோழிங்க நல்லூர் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மேம் பாலங்கள் அமைகின்றன. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் இணைந்து இந்த பணியை மேற்கொள்கின்றன.
2 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலங்க ளுக்கான செலவு ரூ.459.32 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் சாலை மேம்பாட்டு நிறுவனம் ரூ.331 கோடியும், மீதமுள்ள தொகையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.