districts

img

என்.ஆர்.ராமசாமியின் 14வது ஆண்டு நினைவு தினம்

கடலூர், அக்.31- ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவராக திகழ்ந்த தோழர் என்.ஆர்.ராமசாமியின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் சிதம்பரத்தில் அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர்  ராஜா தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ் .ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் பழ. வாஞ்சிநாதன், நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர் குழு உறுப்பினர்கள் சின்னையன், அஷ்ரப் அலி ,ராஜா ஓய்வூதியர் சங்க தலைவர் மகாலிங்கம் கட்சியின் உறுப்பினர்கள் ஹக்கீம் சுந்தரமூர்த்தி உதயகுமார், சாலையோர சிறுகடை கிளை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு  என்.ஆர். ஆர் படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்.