சென்னை, டிச.15- வடசென்னையில் நலவாரிய அலு வலகம் அமைக்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னை பெருநகர கட்டுமான தொழி லாளர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட 26ஆவது மாநாடு மாவட்டத் தலைவர் ஏ.நடராஜன் தலைமையில் ஞாயிறன்று (டிச. 15) ஓட்டேரியில் நடைபெற்றது. சங்கக் கொடியை டி.தனசேகர் ஏற்றினார். துணைச் செயலாளர் டி.சீனிவாசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் பி.லூர்து சாமி வேலை அறிக்கையையும், பொரு ளாளர் எம்.மூர்த்தி வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் ஏ.நடராஜன் வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெய ராமன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக வி.சரவணன் வர வேற்றார். ஜி.சிட்டிபாபு நன்றி கூறினார். தீர்மானங்கள் வடசென்னையில் நலவாரிய அலு வலகம் அமைக்க வேண்டும், வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட கட்டு மானத் தொழிலாளர் உதவித் தொகை களுக்கு அரசாணை வெளியிட வேண்டும், தேச விரோத, மக்கள் விரோத தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், நகர்ப்புற மக்களின் வாழ்விடங்களை அகற்றக் கூடாது, கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான தொழிலாளி மனைவியின் மகப்பேறு நிதி 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், இயற்கையாக மரணம் அடைந்தால் 2 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தலைவராக ஏ.நடராஜன், செயலாளராக பி.லூர்துசாமி, பொருளாளராக எம்.மூர்த்தி உள்ளிட்ட 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.