districts

நெற்பயிர் பாதிப்புக்கு என்எல்சி நிறுவனம் இழப்பீடு

கடலூர், ஆக.4-

      சேத்தியாதோப்பு சுற்று வட்டாரப்  பகுதியில் என்எல்சியால் கையகப் படுத்தப்பட்ட நிலத்தின் பயிர்களுக்கான  இழப்பீட்டுத் தொகையை உயர்நீதி மன்ற உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

      என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ம் சுரங்க விரிவாக்க பணிக்காக கடலூர்  மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியைச்  சுற்றியுள்ள கரி வெட்டி, மேல் வளைய மாதேவி, கீழ் வளையமாதேவி, ஆத னூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதற்கான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் சுரங்க விரிவாக்க பணிகள் நடை பெறாமல் நிலங்கள் அப்படியே இருந்த  நிலையில், விவசாயிகள் அதில் நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர்.

     இதற்கிடையே, என்எல்சி நிறுவ னம், சுரங்க நீரை எடுத்துச் செல்லும்  வகையில் பரவனாறு நிரந்தர மாற்றுப் பாதை பணிக்காக கையகப்படுத் தப்பட்ட இந்த விளை நிலங்களில் தனது  பணியை தொடங்கியது. இதில் அறு வடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு  கடும் எதிர்ப்பு எழுந்தது. பாமக தலை மையில் போராட்டம் நடைபெற்றது.

     இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வீதம் வழங்க  வேண்டும். இதை வரும் 6 ஆம் தேதி  அன்று அல்லது அதற்கு முன்பாக வழங்க வேண்டும் என்று என்எல்சி  இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டி ருந்தது.

    இந்த நிலையில், ஏற்கெனவே ஒரு  ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் காசோலைக ளாக கடந்த 29 ஆம் தேதி நீதிமன்ற  உத்தரவுக்கு முன்பாகவே, சிறப்பு  துணை ஆட்சியரிடம் (நிலம் கைய கப்படுத்துதல்) ஒப்படைக்கப்பட்டது என்றும் மீதமுள்ள தொகைக்கான காசோலைகள், ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வீதம், பயிர்கள் இழப்பீட்டுத்  தொகையை, சிறப்பு துணை  ஆட்சியரிடம் (நிலம் கையகப்படுத்து தல்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே,  நீதிமன்ற உத்தரவின்படி, பாதிக்கப் பட்ட விவசாயிகள் அந்த காசோ லையை பெற்றுக்கொள்ளலாம் என்று என்எல்சி நிறுவனம் அறிவித்துள்ளது.