districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி சிதம்பரத்தில் ரூ1.15 கோடியில் புதிய சாலை

சிதம்பரம், செப்.6- சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட கதிர்வேல் நகரிலிருந்து மீதி குடி கிராமம் வரை 1,800 மீட்டர் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் இருந்தது. இதனால் மீதிகுடி, கோவிலாம்பூண்டி, முத்தையா நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பொது மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து தீக்கதிரில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இந்த நிலையில், கொத்தங்குடி ஊராட்சி பொதுமக்கள், குடியிருப்போர் நல கூட்ட மைப்பு சார்பில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா, நகரத் தலைவர் அமுதா, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி  கஜேந்திரன் உள்ளிட்டோர் புதிதாக சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து, பரங்கிப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடை பெற்றது. அதில் உடனடியாகச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 15 லட்சம்  செலவில் கதிர்வேல் நகரிலிருந்து மீதி குடி கிராமம் வரை 1800 மீட்டர்  நீளத்திற்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.