விழுப்புரம்,ஆக.17-
செஞ்சி அருகே பரதன் தாங்கல் ஏரியில் உள்ள பொது குடிநீர் கிணற்றில் மாணவி பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே உள்ள பரதன் தாங்கள் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் ஜனனி (16). ஆலம்பூண்டி யில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் புதன்கிழமை (ஆக.16) மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். பிறகு, வெளியே சென்றவர் வெகு நேர மாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து, உறவி னர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில், மாணவி ஜனனி பள்ளி சீருடையுடன் ஏரியில் உள்ள பொதுக் கிணற்றில் பிணமாக மிதந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் செஞ்சி தீயணைப்பு படையினர் கிணற்றில் மிதந்த மாணவியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த னர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை யினர் விசாரணை செய்து வருகின்றனர்.