districts

img

மரணக் குழிகளாக மாறிய தேசிய நெடுஞ்சாலை

கிருஷ்ணகிரி,ஜன.4- ஓசூர் நகரை சுற்றிலும் உள்ள சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை, குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை பராமரிக்கப்படுவது இல்லை. ஓசூர் பழைய பேருந்து நிலையம் முதல் தமிழ்நாடு எல்லையான ஜூஜூவாடி முடிவு வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை முறையாக பரா மரிக்க படுவதே இல்லை. பிரதான சாலைக்கு சர்வீஸ் (அணுகு) சாலைக்கு நடுவில் உள்ள பாதாள சாக்கடை பெயரளவில் மட்டுமே உள்ளது.  குப்பைகள் நிறைந்து அடைத்துக் கொள்வதால் மழைக்காலத்தில் சாக்கடைக்குள் தண்ணீர் செல்லும் சாலையில் தேங்கி நிற்கிறது. சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாதாள சாக்கடை மூடப்படாமல் பல ஆண்டுகளாக மரண பள்ளங்கள் திறந்தே கிடக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நடந்து செல்வதற்கு நடைமேடை போடப்பட்டது. ஆனால், தற்போது பல இடங்களில் அதற்கான சிறுதடயமும் இல்லை. குப்பைகள் மேடு, பள்ளங்களாகவும் குவிந்து கிடக்கிறது. சாலையின் இருபுறமும் சிமெண்ட் மூடிகள் இல்லாமல் உள்ள பாதாள சாக்கடையால் பாதசாரிகள்,இரு சக்கர வாகனத்தில் செல்வோர் இந்த குழியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். தினமும் இரண்டு மூன்று முறை இந்த வழியாக சாலை பராமரிப்பு அதிகாரிகள் வாகனங்களில் சென்று வரு கின்றனர். ஆனால் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இது குறித்து நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. உடனடியாக நெடுஞ்சாலைத் துறை தலையிட்டு திறந்து கிடக்கும் மரண பலன்களை உடனடியாக மூட வேண்டும் நடைமேடைகளை சீர்படுத்த வேண்டும்,இடையூறாக கிடக்கும் தேவையற்ற குப்பைகளை,சிமெண்ட் கட்டிகள் அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.