கிருஷ்ணகிரி,நவ.24- கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் இந்த விழாவுக்கு மூத்த அமைச்சர் துரை முருகன் தலைமை தாங்கினார். பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதி யழகன்,நகராட்சி தலைவர் பரிதா நவாப், முன்னாள் தலைவர் நவாப் ஆகியோர் முன்னிலையில் வகித்தார்கள். அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆர். காந்தி, அர.சக்கரபாணி,ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்,மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.