வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி சென்னை அரும்பாக்கத்தில் வணிக வளாகத்துடன் கட்டப்பட்டு வரும் வாரிய வீடுகளையும் அண்ணாநகர் கிழக்கு சிந்தாமணியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம், ஷெனாய் நகர் மற்றும் நந்தனம் பிரேமா காலனி குடியிருப்பு திட்டங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் சிற்றரசு, வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் சுன்சோங்கம் ஐடக் சிரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.