திருவண்ணாமலை,ஆக.18- திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வட்டம், ஜவ்வாது மலை பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சட்டமன்ற உறுப்பி னர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்) ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ஜவ்வாது மலையில் உள்ள பலா மரத்தூர் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.2.91 கோடியில் சாகச சுற்றுலா கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது ”என்றார். அடுத்தகட்டமாக, 8 ஏக்கரில் சாகச சுற்றுலா வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளது. மேலும் வாகனம் நிறுத்துமிடம், நுழைவு வாயில், உணவகம், நிர்வாக அலுவலகம், கழிப்பறை போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். வெளி நாடுகள் மற்றும் வெளி மாநி லங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தால் மாநிலம் முழுவதும் சுற்றுலாத்துறை சார்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுலாத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள் மற்றும் விடுதிகள் மேம்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.