ராணிப்பேட்டை, டிச. 3 – ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சி, வின்டர் பேட்டை அன்னை தெரசா தெருவில் வசிக்கும் சபிரா, ஷகீரா தம்பதியர் மகன் 7 ஆம் வகுப்பு பயிலும் செல்வன். ரிஸ்வான் (12) ஞாயிறன்று (டிச. 1) பெஞ்சல் புயல் தொடர் மழை யின் காரணமாக ஈரமான வீட்டின் சுவற்றில் மின் கசிவு ஏற்பட்டது. தெரியாமல் கழிப்பறை மின் விளக்கு பட்டனை அழுத்தும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததையடுத்து. திங்க ளன்று (டிச. 2) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி சிறுவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சத்திற்கு காசோலை இணையும், சொந்த பணம் ரூ. 50 ஆயிரத்தையும் சிறுவன் பெற்றோர்களிடம் வழங்கி ஆறு தல் தெரிவித்தார். இதில் மாவட்ட ஆட்சி யர் ஜெ.யு. சந்திரகலா, வரு வாய் கோட்டாட்சியர் வெங்கடேசன், நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி, வட்டாட்சியர் ஸ்ரீதேவி உடனிருந்தனர்.