districts

img

ரூ. 42.56 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்

வேலூர், பிப்.8 - வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி திட்டப் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.42.56 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 400 அடுக்குமாடி குடியிருப்புகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தும் 154 பயனாளிகளுக்கு ரூ.12.75 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி களை வழங்கினார். இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர், “ஒவ்வொரு குடியிருப்பு ரூ.10.64 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் ரூ.7  லட்சம் மாநில அரசு மானியம், ரூ.1.50 லட்சம் ஒன்றிய அரசின் மானியம், பயனாளிகள் பங்களிப்பு தொகை ரூ.2.14 லட்சம்” என்றார். சேர்க்காடு பகுதியில் 100 படுக்கை வசதி யுடன் கூடிய மருத்துவமனை கட்டப்பட்டு வரு கிறது. இன்னும் ஒரு மாதத்தில் அந்த மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் மா.சுனில் குமார், காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் வே.வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.