சென்னை,ஜூன் 18-
சென்னை எம்.ஜி.ஆர் நகர் அடுத்த சூளைப்பள்ளம் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் சனிக்கிழமையன்று இரவு 9 மணி அளவில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர். மின்தடை குறித்து மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது அதிகாரிகள் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இரவு ஒரு மணி வரை மின்தடை நீடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சூளைப்பள்ளம் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.