districts

img

மெட்ரோ ரயிலில் பேடிஎம் மூலம் டிக்கெட்

சென்னை, ஆக். 4-

    சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக வாட்ஸ் அப்பை தொடர்ந்து  பேடிஎம் மூலம் டிக்கெட் செய்யும் முறையை மெட்ரோ நிறுவனம் அறிமு கம் செய்துள்ளது.

    சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் பேடிஎம் ‌செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும்  வசதியை சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் அறிமுகம்  செய்து வைத்தார். இதில் இயக்குநர் அர்ச்சுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேடிஎம் செயலி மூலம் ஏற்கெனவே மும்பை, ஹைதராபாத் தில்லி பெங்களூரு நகரங்களில் டிக்கெட் பெறும் வசதி உள்ள நிலை யில் தற்போது சென்னையில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

   பேடிஎம் செயலில் ட்ரன்சிட் பகுதி யில் சென்னை மெட்ரோ ரீசார்ஜ் என்ற  ஆப்ஷன் உள்ளது. அதில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும். ஒரு முன்பதிவில் அதிகபட்சம் 6 டிக்கெட் எடுத்துக் கொள் ளலாம். வழக்கம்போல் மெட்ரோ டிக்கெட் பெறும் முறைகளில் 20 விழுக் காடு கட்டண தள்ளுபடி உள்ளது போல்  புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள பேடி எம் செயலியிலும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலாண் இயக்குநர் சித்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதல்கட்ட திட்டத்தில் 6 பெட்டிகள் கொண்ட  28 ரயில் தொடர்களை வாங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ரயில் தொடர்களில் இணைப்பு பெட்டி களை இணைப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனால் மாற்று  வழியாக கூடுதலாக 28 ரயில் தொடர் களை வாங்க முடிவு செய்துள்ளோம். இது 2 வருடங்களில் நடைமுறைக்கு வரும் என்றார்.

    மேலும், மெட்ரோ அடையாள அட்டை புதிதாக யாருக்கும் வழங்க வில்லை. பழைய அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் மட்டும் ரீசார்ஜ் செய்து கொள்ள லாம். புதிதாக அட்டை வாங்க முன்  வருபவர்களுக்கு சிங்கார சென்னை  அட்டை வழங்க அறிவுறுத்தியுள் ளோம். யாரையும் கட்டாயப்படுத்த வில்லை. மெட்ரோ பார்க்கிங்கில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பயணம் செய்யாதவர்கள் பார்க்கிங்கை பயன்படுத்துவதால் போதுமான இடவசதி இல்லாத நிலை ஏற்படுகிறது என்றும் சித்திக் கூறினார்.