சென்னை, டிச.27- தற்கொலைகளை தடுக்க மனநலன் சார்ந்த வழிகாட்டுதல்களை தேவை என்று ரோட்டரி கிளப் நிர்வாகி ஸ்ரீதர் தெரி வித்தார். தமிழ்நாடு மாநிலத்தில் தற்கொலையுடன் தொடர்புடைய உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதன் பின்ன ணியிலுள்ள முக்கிய காரணங்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை இன்ஃ போசிட்டி வெளியிட்டுள்ளது. இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்கொலையால் உயி ரிழக்கும் நபர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி கற்பதற்கு ஆதரவளிக்கும் செயல்திட்டத்தின் ஒருபகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.தேசிய குற்ற ஆவண காப்பக தரவின்படி 2021ஆம் ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை அளவில் தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்துள்ளது. ஒரே ஆண்டில் மட்டும் 18,925 தற்கொலைகள் தமிழ்நாட்டில் பதிவாகியிருக்கின்றன. இதே கால அளவின்போது 22,207 தற்கொலைகள் என்ற எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்றார். பெற்றோர் தற்கொலையால் பாதிக்கப்படும் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தாமல் தொடர அவர்கள் உயர் கல்வி படித்து முடிக்கும் வரை வான வில் என்ற திட்டத்தின் கீழ் ரோட்டரி கிளப் ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
பல நேர்வுகளில் தாங்கள் நேசித்த ஒரு நபரை தற்கொலை சார்ந்த இறப்பினால் இழக்கும் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக வாழ்க்கை துணையாக உள்ள நபர்களும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை தென்படுகிறது. உணர்வு மற்றும் மனநலம் சார்ந்த வழிகாட்டல் இல்லாததும் அவர்களது வாழ்க்கையில் திடீரென நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்விற்குப் பிறகு தைரியத்துடன் வாழ்க்கையை நடத்த அவர்களுக்கு ஆதரவும் அரவணைப்பும் கிடைக்காததும் இதற்கு காரணமாக இருக்கிறது என்று பிளாக் அன்ட் ஒயிட் என்டர்பிரைஸ் நிறுவனர் எஷிடா கூறினார். தற்கொலையால் உயிரிழந்த நபர்க ளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டப்படுவதாகவும் பாது காப்பான எதிர்காலத்தை பெறுவதற்கு உயிரிழந்த நபரின் வாழ்க்கை துணைக்கு வேலைவாய்ப்புகளும் கண்டறியப்பட்டு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.