districts

img

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிதம்பரத்தில் நூதன போராட்டம்

சிதம்பரம், ஏப்.24 - அரசு மருத்துவக் கல்லூரி யில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தையே சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் வசூலிக்க வேண்டும் என்று மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 11வது நாளாக சனிக்கிழமை யன்று(ஏப்.23)கல்  லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் தொடர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழக அரசு எந்த நட வடிக்கையும் எடுக்காத தால் கடந்த 21 ஆம் தேதி முதல் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளா கத்தில் நூதன போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்த நிலையில் சனிக்கிழ மையன்று (ஏப்.24) மாண வர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து கருப்பு கொடியுடன் ரத்தத்தால் கைரேகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.