புதுச்சேரி, பிப். 14- குறிஞ்சி நகரில் அடிப்படை வசதி களை நிறைவேற்றிட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உழவர்கரை நகரக் குழு விற்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதி கூட்டம் தலைவர் பெரியநாயகி தலை மையில் நடைபெற்றது. பிரதேச தலை வர் இளவரசி சங்கத்தின் எதிர்கால பணி கள் குறித்து பேசினார். செயலாளர் சத்தியா, உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் முனியம்மாள், பொரு ளாளர் கோமதி, நிர்வாகிகள் பொன்னம்மாள், மோகனா உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், புதுச்சேரி உழவர் கரை நகராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நக ரில் உட்புறச் சாலைகள், எரியாத மின் விளக்குகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கொடுக்க வேண்டும். குறிஞ்சி நகர் சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும். ரேசன் கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.