விழுப்புரம், ஜன.13- செஞ்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செஞ்சி வட்டார குழு அலுவலகத்தில் தூய்மை பணியாளர்க ளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கி, பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இலக்கியபாரதி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாதர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.கீதா, கலந்து கொண்டு, துய்மை பணியில் ஈடு பட்டு வரும் பெண் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினர். அதைத் தொடர்ந்து, விறகு அடுப்பு மூட்டி மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், சத்துணவு சங்க மாவட்டச் செயலாளர் மலர், சிபிஎம் வட்டார செயலாளர் ஆல்பட் வேளாங்கண்ணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.