கிருஷ்ணகிரி,செப்.3- ஊத்தங்கரை வட்டம், சாமல்பட்டியில் ரயில்வே பாலத்திற்கு கீழ் சுரங்க தரைப்பாலம் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தேங்கும் நீர் வடி வதற்கான பாதாள கால்வாய்கள் சீர மைக்கப்படாததால் மழைக்காலங்களில் அதிக அளவு நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் தேசிய நெடுஞ்சாலை துறைக்கும் பல முறை புகார் அளிக்கப்பட்டும் அரசு அதி காரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் 4 அடி வரை மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இரண்டு கிலோமீட்டர் நீளம் வரை வாகனங்கள் நின்றன. தண்ணீரில் வாகனங்கள் செல்லும்போது பழுதாகி நின்று விடுவதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாகவே மழை காலங்க ளில் இந்த பிரச்சனை ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக தலையிட்டு மழை நீர் உடனடியாக வடிவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.