மக்களவை பொதுத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தி கடலூரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய போட்டியானது பீச் ரோடு வழியாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச் வரை சென்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு ஓடினர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கோட்டாட்சியர் அபிநயா, மகளிர் திட்ட இயக்குநர் சுருதி, சமூக நலத்துறை அலுவலர் கோமதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.