கடலூர், ஆக.29- ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழி தவிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக மஞ்சப்பை விருது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்படுகிறது. இவ்வாண்டு சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ரொக்க பரிசு ரூ. 3 லட்சம் மற்றும் சான்றிதழ் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். விருதை கல்லூரியின் முதல்வர் சு. சபீனா பானு மற்றும் மஞ்சப்பை திட்ட முதன்மை அதிகாரி கோ.கவிதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.