districts

img

மணலி ஆதித்தனார் பெண்கள் பள்ளியில் தேர்தல் திருவிழா

சென்னை,ஜூலை 7-

    மாணவிகளுக்கு இடையே ஒரு தலைமை நிர்ணயம் செய்யவும் தேர்தல் மற்றும் ஓட்டுரிமை பற்றி மாணவிகள் தனது பள்ளி பருவத்திலேயே தெரிந்து கொள்ளவும் விழிப்புணர்வுக்கான தேர்தல் திருவிழா மணலி டாக்டர் சிவந்தி ஆதித்த னார் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடை பெற்றது.

    பள்ளியின் வகுப்பு தலைவரை தேர்ந்தெடுக்கும் விழாவிற்கு பள்ளி தாளா ளர் கே.சந்திரமோகன் தலைமை தங்கினார். பள்ளி தலைவிக்கு பிளஸ் 2, மாணவிகள் 6 பேரும், வகுப்பு தலை விக்கு அந்தந்த வகுப்பு மாணவிகளும் போட்டியிட்டனர். இதற்காக கடந்த மாதம் 30ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்த னர். 3, 4, 5 தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்த னர். வெள்ளியன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. பொது தேர்தல் போன்று மாணவி கள் வரிசையில் நின்று வாக்க ளித்தனர். வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. வாக்களித்தவர்கள் கையில் மை வைக்கப்பட்டது. பின்னர் வாக்குகள் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப் படும் என பள்ளியின் தேர்தல் அதிகாரி தெரி வித்தார்.