districts

img

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கொடி கடந்து வந்த பாதையும், கடக்க வேண்டிய தூரமும்... - எம்.சிவக்குமார் மாவட்டச் செயலாளர்

1989      ஆம் ஆண்டு ஒன்றுபட்ட வேலூர் வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருவண்ணாமலை சம்பூவராயர் மாவட்டம் பின்னா ளில் திருவண்ணாமலை மாவட்ட மாக பெயர் பெற்றது.   திருவண்ணா மலை மாநகராட்சி, ஆரணி, செய்யார், வந்தவாசி ஆகிய மூன்று நகராட்சிகளும்,  12 தாலுகா ,10 பேரூராட்சி, 18 ஊராட்சி ஒன்றியம், 860 ஊராட்சிகள், 1067 கிராமங்கள், 53 குறு வட்டங்கள் என பறந்து விரிந்த மாவட்டமாக உள்ளது.  மாவட்டத்தில்  வசிக்கும்  மக்களின், பொருளாதார சுரண்டல்,  சமூக கொடுமை, பெண் அடிமைத் தனம், வாழ்நிலையில் ஏற்றத்தாழ்வு  ஆகியவற்றுக்கு  எதிராகவும், தொழில் வளர்ச்சி- விவசாய பாது காப்பு, மக்களின் வாழ்க்கை மேம்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அன்றாடம் பணியாற்றிக் கொண்டி ருக்கிறது.  மக்களின் அடிப்படை  உரிமை களுக்காகவும் கோரிக்கைகளுக் காகவும் தொடர்ந்து இயங்கி வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் திருவண்ணா மலை மாவட்ட 10 வது மாநாடு சனிக்கிழமை (நவ.16)  துவங்குகிறது. கல்வித்தளத்தில்  ஆரம்பப்பள்ளி, உயர் கல்வி, மேல்நிலை பட்டப் படிப்பு என  இலவச கல்வி கிடத்திட வும், ஆசிரியர் காலி பணியிடங் களை நிரப்பிடவும், கட்டாய நன் கொடைக்கு  எதிராகவும், தனியார் பள்ளிகள்  மற்றும் கல்லூரிகளில் அதிக கட்டணத்திற்கு எதிராகவும் நாளும் போராடி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும்,  கல்வி  வளாகங்களில் மதவெறி பிரச்சாரத் திற்கு எதிராகவும் சிபிஎம் குரல் எழுப்பி வருகிறது.  “விளைவித்த வெள்ளாமை வீடு  வருமா?  வாங்கிய கடனுக்கு வய லோடு போய்விடுமா’’ என்பது  ஒவ்வொரு விவசாயிகளின் ஏக்கப்  பெருமூச்சே. விவசாயிகள் வாழ்வா தாரம் உயர, மானியத்துடன் கூடிய இடுபொருள், உற்பத்தி பொரு ளுக்கு சரியான விலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தின் மூலம் தடையின்றி கடன் கிடைத் திட, சிபிஎம் தொடர்ந்து போராடி வருகிறது. டெல்டா மாவட்டத்தில் மட்டுமே செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் , திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் போராட்டத்தின் வாயிலாக  2012 ஆம் ஆண்டு முதல் செயல்படத் துவங்கியது, தற்போது மாவட்டத் தில் 83 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன. காட்டு விலங்குகளிடமிருந்து விவசாய விளைச்சலை  பாதுகாத்திட இயக்கம் நடத்தி, அடி அண்ணா மலை  வன எல்லைகளை சுற்றி முள் கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதுபோல் மாவட்டம் முழுவதும் நட வடிக்கை எடுக்க தொடர்ந்து இயங்கி வருவதுடன்,  இன்றைக்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில்  சிண்டி கேட் முறைக்கு எதிராக தொடர்ந்து களத்தில் நிற்பது மார்க்சிஸ்ட் கட்சியே. சமூகக் கொடுமைகளுக்கு  எதிராக 1996 ஆம் ஆண்டு இளங் குண்ணியில் ஆலய நுழைவு போரா ட்டம் தொடங்கி, வசூர் இரட்டை குவளை முறை, தாமரைப்பாக்கம் ஆலய நுழைவு ,வேடந்தவாடி முடி வெட்டுதல், ஆலயம் நுழைவு மற்றும் சுடுகாட்டுப் பாதை, காப்பலூரில் பஞ்சமி நில மீட்பு ,சிறுவள்ளூர் ஆலய நுழைவு போராட்டம், கடப் பன்குட்டை பஞ்சமி நில மீட்பதற் கான போராட்டம், வரகூர் கிராம கோயில் தேர் தாழ்த்தப்பட்ட பகுதிக்கு கொண்டு வர போராட்டம் என துவங்கி, பழங்குடி மக்கள் இருப்பிடம், சாதி சான்று, பண்ணி யாண்டிகள் சாதி சான்று கேட்டு இயக்கம் என வளர்ந்து, நடப்பு ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி, ஆருங்குணம் கிராமத்தில் 100 ஏக்கர் பஞ்சமி நிலப் போராட்டம் நடத்தி வெற்றிகண்ட  இயக்கமாக மிளிர்ந்து வருகிறது சிபிஎம்.  சட்ட விரோதமாய் இயங்கிவரும் தீபம் நகர் சுங்க சாவடியை அகற்ற போராட்டம்,  ஏழை, எளிய, உழைப் பாளி மக்களுக்கு குடி மனைப் பட்டா கேட்டு போராட்டம், கந்து வட்டி, போதை இல்லா தமிழகம்,நுண் நிதி நிறுவனங்களின் கொடுமை, என உழைக்கும் மக்களின் நலனுக்காக போராட்டம் நடத்தி வரும்  நமது கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட 10வது மாநாடு சனிக்கிழ மையன்று பேரணி- பொதுக்கூட்டத்து டன் துவங்கி, நாளை 17,18 மாநாட்டை நடத்தி திருவண்ணா மலை மாவட்ட மக்களின் கோரிக்கை களை தீர்மானமாக்க,  திட்ட மிடும் மாநாடு பேரணி-பொதுக்கூட்டத்தில் சங்கமிப்போம்.வாருங்கள்.