கடலூர்,ஆக.23-
சட்டமன்ற உறுதி மொழிக் குழு கடலூர் மாவட்டத்தில் புதனன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.
சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் வேல் முருகன் தலைமையில், எம்எல்ஏக்கள் மோகன், ராமலிங்கம், வில்வநாதன், சக்கரபாணி, அருள் ஆகி யோர் கடலூர் மாவட்டத் திற்கு வருகை தந்தனர். இந்த குழுவினர் கடலூர் துறைமுகம், சிப்காட் பகுதி, பெருமாள் ஏரி, வடலூர் மற்றும் நெய்வேலி சுரங்கங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் துறைமுகத்தில் ரூ.135 கோடி செலவில் புனரமைப்பு தூர்வாரப்பட்ட துறைமுகம் ஒரு பகுதியில் ஆழப்படுத்தவில்லை என்று மீனவர்கள் புகார் தெரி வித்தனர். கடலூர் சட்ட மன்ற உறுப்பினர் ஐயப்பனும் இந்த புகாரை தெரிவித்தார்.
இதனை அடுத்து உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்தது.
சிப்காட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட குழு வினர் கெமிக்கல் தொழிற் சாலைகளில் சட்ட விதிகள் உட்பட்டு சுத்திகரிப்பு பணி கள் முறையாக செயல் படாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. நீர், நிலம் மாசு ஏற்பட்டுள்ளது, நேரடியாக கழிவுகள் கடலில் கலக்கப்படுவதால் கடல் பாதிக்கப்படுகிறது. இதனை மாசு கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் முறை யாக ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த குழுவுடன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.