districts

img

கட்சி வளர்ச்சிக்கு உதவி செய்தவர் முத்தம்மாள்

திருவள்ளூர், மே 13- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திரு வள்ளூர் மாவட்டச் செய லாளர் எஸ்.கோபால் தாயார் முத்தம்மாள் (72), ஏப் 28 அன்று கால மானார். அவரின் உடல் திரு வள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. மறைந்த முத்தம்மாளின் படத்திறப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று (மே 12) சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள  எஸ்.கோபால் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் இ.ஜெயவேலு தலைமை தாங்கினார். முத்தம்மாளின் படத்தை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்பு ராஜன் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மாநிலக் குழு உறுப்பி னர் ஏ.பாக்கியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், பி.துளசி நாராயணன், கே. ராஜேந்திரன், ஜி.சம்பத், முன்னாள் மாவட்ட செய லாளர் கே.செல்வராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி இலவை. பாளையம், பொன்னேரி பகுதி செய லாளர் எஸ்.இ.சேகர், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.பத்மா, சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.அருள், ஒன்றிய செயலாளர் பாலன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். “சிறுவாக்கம் கிராமத்தி லிருந்து மாவட்ட தலைமை பொறுப்புக்கு உயர்ந்திருக்கும் எஸ்.கோபால் இயக்கப்பணிக்கு பேருதவியாக இருந்தது மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் தாயாக இருந்து வந்தவர் முத்தம்மாள். மேலும் பலர் தலைமை பொறுப்பேற்று பணியாற்ற கூடிய ஊழியர்களை உருவாக்கவும் அடித்தள மாக திகழ்ந்த முத்தம்மாளின் மறைவு ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் பேரிழப்பு” என்று தலைவர்கள் புக ழஞ்சலி செலுத்தினர்.

;